News April 15, 2024
திருப்பத்தூர்: தூக்கி வீசப்பட்ட பணம்

வாணியம்பாடி தாலுகா பெத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.2.38 லட்சத்தை வீசிவிட்டு கட்சி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். இவர்கள் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையிலான குழு பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
திருப்பத்தூர் வாக்காளர் திருத்தப் பணிகள் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 050–திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கான வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமிருந்து பெறப்படும் கணக்கீட்டு பதிவுகளை BLO செயலியில் புதுப்பிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திருமதி க.சிவசௌந்திரவல்லி (நவ.16) அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 16, 2025
நரியம்பட்டு: ஆட்டோ கவிழ்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்!

உமராபாத் பகுதியை சேர்ந்த நிஷாத் அகமத் வயது (65) கூலி தொழிலாளி. நேற்று (நவம்பர்-15) நரியம்பட்டு ஊராட்சி ராமச்சந்திரபுரம் பகுதியில் ஆட்டோவில் வந்து போது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்தில் உயர் இழந்தார். இதனை அடுத்து ஆட்டோ டிரைவர் பெரியவரிகம் பகுதியை சேர்ந்த முருகேசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும், இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 16, 2025
திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் நலனுக்காக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ-16) காவல்துறை வலைதள பக்கத்தில். “வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும்” என அறிவிக்கப்பட்டது.


