News October 8, 2025
அண்ணாமலை தலைமையில் உருவாகிறதா தனி கூட்டணி?

நயினாருடன் பனிப்போர், EPS-வுடனான பழைய பகை உள்ளிட்டவை காரணமாக தனிகட்சி தொடங்க அண்ணாமலை மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்காக, டிடிவி, OPS, அன்புமணி, ஜான் பாண்டியனை அவர் ரகசியமாக சந்திக்கிறாராம். அதிமுகவை கைப்பற்றணும் என தினகரனும், அரசியல் ஆளுமை ஆகலாம் என அண்ணாமலையும் போடும் கணக்கே இதற்கு காரணம் என்கின்றனர். இதை அறிந்தும் டெல்லி தலைமை அமைதி காப்பதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
Similar News
News October 8, 2025
திரை நாயகரை வழிபடுகிறோம்: ரிஷப் ஷெட்டி

நாம் திரை நடிகரை வழிபடும் மனநிலையில் உள்ளோம் என்று கரூர் துயரம் குறித்த கேள்விக்கு ரிஷப் ஷெட்டி பதிலளித்துள்ளார். இது வேண்டுமென்ற செய்யப்பட்டது அல்ல என்ற அவர், பலர் செய்த கூட்டு தவறாக இருக்கலாம் என கூறியுள்ளார். சில சமயங்களில் போலீஸால் கூட கும்பலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என தெரிவித்தார். முன்னதாக, கரூர் சம்பவத்தால், சென்னையில் நடைபெறவிருந்த காந்தாரா பட விழா ரத்து செய்யப்பட்டிருந்தது.
News October 8, 2025
ஹீரோவாகும் உதயநிதியின் மகன் இன்பநிதி

DCM உதயநிதியின் மகன் இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்பநிதி தற்போது நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். அதன் வீடியோக்கள் SM-ல் வெளியாகி வைரலானது. அண்மையில் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் ஹீரோவாக களமிறங்க உள்ளதாகவும் அந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News October 8, 2025
CJI மீது காலணி வீச்சு: கிரிமினல் வழக்கு தொடர கோரிக்கை

SC CJI பிஆர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது, கிரிமினல் வழக்கு தொடர சம்மதம் கோரி, அட்டர்னி ஜெனரலுக்கு மூத்த வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். கிஷோரின் செயல் உச்சநீதிமன்றத்தின் மாண்பை குலைப்பதுடன், அரசியலமைப்பையும் அவமதிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பவத்துக்கு பின்பும் அவரது நடத்தை மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.