News October 8, 2025

ஒரு தண்ணீர் பாட்டிலில் 2 லட்சம் Nano- Plastics துகள்கள்! உஷார்!

image

1 லிட்டர் வாட்டர் பாட்டிலில் சுமார் 2,40,000 நானோ பிளாஸ்டிக் துகள்கள் ஒளிந்திருக்கின்றன தெரியுமா? பிளாஸ்டிக் பாட்டில்கள் ஏற்படும் பாதிப்புகள் கற்பனைக்கும் எட்டாதவை. US-ன் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸின் ஆய்வின்படி, இந்த நானோ பிளாஸ்டிக்குகள் உள்ளுறுப்புகள் & ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு பல பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இனி பிளாஸ்டிக் பாட்டில் மூடியை திறக்கும் போது, இதை ஞாபகம் வெச்சிக்கோங்க. SHARE.

Similar News

News October 8, 2025

இதில் உங்க சாய்ஸ் எது?

image

நீண்ட கால சேமிப்பு தொடங்க விரும்புபவர்களுக்கு, எப்படி சேமிக்கலாம், எதில் முதலீடு செய்யலாம், என்று பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். ஆரம்பத்தில், பெரிய ரிஸ்க் எடுக்காமால், அரசு ஆதரவு உள்ள பாதுகாப்பான சில முதலீடுகளை செய்யலாம். அவை என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து சேமிப்பை தொடங்குங்கள்.

News October 8, 2025

BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் மாற்றம்

image

ஊர், தெரு, சாலைகளின் பெயர்களுக்கு பின்னால் உள்ள <<17949340>>சாதிப் பெயர்களை நீக்க<<>> TN அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆதார், ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பெயர் மாற்றத்தை உள்ளாட்சி, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்த பிறகு, TNeGA, ELCOT மூலம் ஆதார், ரேஷன் கார்டுகளில் முகவரி திருத்தங்கள் செய்ய மக்களுக்கான முகாம்கள் அமைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. SHARE IT.

News October 8, 2025

11 நாள்களுக்கு பிறகு தவெக ராஜ்மோகன் உருக்கம்

image

கரூர் துயரில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக துணை பொ.செ., ராஜ்மோகன் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் பரவின. இதனால் அவர் குறித்த மீம்ஸ் SM-ல் பரவின. இந்நிலையில், 11 நாள்களுக்கு பிறகு ராஜ்மோகன் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் வலியில் பங்கெடுத்து கொள்வதாலேயே இந்த அமைதி என்றும் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!