News October 8, 2025
சென்னை: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை ரத்து!

சென்னை, 2017ம் ஆண்டு தன் வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை தஷ்வந்த் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் இன்று (அக்.8) இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், தஷ்வந்த் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News October 8, 2025
மெரினாவில் இனி ஓடவும், ஒளியவும் முடியாது!

மெரினா கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு உயர் தொழில்நுட்பம் கொண்ட ஏஐ கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த AI தொழில்நுட்பம் மூலம், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள், பாதுகாப்பு மீறல்கள் போன்றவற்றை தானாகவே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவுதவும்.
News October 8, 2025
சென்னை: டிகிரி போதும், ரூ.1.2 லட்சம் சம்பளம்!

சென்னை மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள்<
News October 8, 2025
மின்சார ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

இன்று முதல் நவம்பர் 5 வரை திருப்பதியில் இருந்து இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில் (66070) மதியம் 1:30 மணிக்கு திருச்சனூரில் இருந்து இயக்கப்படும். அதேபோல் மறு மார்க்கத்தில் மின்சார ரயில் காலை 9:50 மணிக்கு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில் திருச்சனூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.