News October 8, 2025

நெல்லையில் பெட்ரோல் பங்க் சூறை

image

சேரன்மகாதேவி ஆர்.சி. நடுநிலைப் பள்ளி அருகில் கடையத்தை சேர்ந்த சைத்அலி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில், நேற்று முன்தின இரவு, அடையாளம் தெரியாத இருவர் டூவீலரில் வந்து, ஊழியர்களை மிரட்டி பைக்க்கு இலவச பெட்ரோல் கேட்டனர். மறுத்ததால், அரிவாளால் பங்கை சூறையாடி தப்பினர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 8, 2025

நெல்லை: நாளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சபாநாயகர்

image

நெல்லை மாவட்ட பகுதிகளான உவரி, உறுமன்குளம், கரைச்சுத்தி புதூர், கூந்தன் குழி, இராமநாதபுரம், திருவம்பல‌புரம் ஆகிய பகுதிகளில் பல்வேறு அரசு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் நாளை (அக்.9) காலை முதல் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

News October 8, 2025

நெல்லை: NLCயில் 1,101 காலியிடங்கள்! உடனே APPLY

image

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் 21.10.2025 ம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 8, 2025

நெல்லை: நீதிபதி மீது காலணி வீசியவர் மீது வழக்கு

image

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில், திருட்டு வழக்கில் கைதான மத்தியபிரதேசத்தை சேர்ந்த திரேந்தர் சிங் (29), நீதிபதி அருண்சங்கரை நோக்கி காலணி வீசினார். காலணி நீதிபதியின் கணினியில் பட்டு விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் அவரைப் பிடித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, திரேந்தரை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து அவர் மீது போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!