News October 8, 2025

இன்று முதல் அமலுக்கு வந்தது

image

Google Pay, PhonePe, Paytm மூலம் பணம் அனுப்பும்போது இனி PIN நம்பரை உள்ளிடவேண்டிய அவசியமில்லை. மாறாக, முகம் (அ) கைரேகையை வைத்தே ₹5,000 வரை பணம் அனுப்பலாம். PIN நம்பரை விட இவை பாதுகாப்பானது என கருதி NCPI இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. Biometric முறை நடைமுறைக்கு வந்தாலும், PIN நம்பர் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News October 8, 2025

3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

image

2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான மேம்பாட்டுக்காக (For the development of metal–organic frameworks) ஜப்பானின் சுகமு கிடகாவா, ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஓமர் எம்.யாகி ஆகியோருக்கு நோபல் விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

News October 8, 2025

கவர்னர் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார்: உதயநிதி

image

எல்லா கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் கவர்னரும் பரப்புரையை தொடங்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகம் யாருடன் போராட போகிறது என கவர்னர் RN ரவி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகம் கவர்னருடன் போராடி கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து போராடி வெல்வோம் என்றும் கூறியுள்ளார்.

News October 8, 2025

விஜய்க்காக மதுரை தவெகவினர் ஒட்டிய போஸ்டர்

image

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு எதிராக சூழ்ச்சி நடப்பதாக தவெகவினர் கூறிவருகின்றனர். இதனாலேயே மனதளவில் சோர்ந்துள்ள விஜய் இன்னும் களத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு தெம்பூட்டும் வகையில் மதுரையில் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், கரூர் விவகாரத்தில் உண்மை வெளிவரும் என சொல்லும் வகையில் MGR-ன் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

error: Content is protected !!