News April 15, 2024
பொன்முடி வழக்கில் பிறழ்சாட்சியம்

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியம் அளித்திருக்கிறார். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகி பிறழ்சாட்சியம் அளித்தார். டிஜிபி அலுவலகத்தில் வைத்து தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டதாகவும், வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் சின்னசாமி தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு, பொன்முடிக்கு சாதகமாக மாறுகிறது.
Similar News
News November 10, 2025
காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யாதீங்க!

உணவு, வேலை என மாறி வரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நமது உடலை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யும் 5 விஷயங்கள் உங்கள் நாளை வெகுவாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, டாக்டர் பிரகாஷ் மூர்த்தி, காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத 5 விஷயங்களை பட்டியலிட்டுள்ளார். அதை மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிஞ்சுக்கோங்க.
News November 10, 2025
ஆப்கன் – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

துருக்கியில் நடந்து வந்த ஆப்கன் – பாகிஸ்தான் இடையேயான, 3-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானின் நியாயமற்ற கோரிக்கைகள் தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என ஆப்கன் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், போரில் ஈடுபடுவது தங்களது நோக்கமல்ல எனவும், ஆனால், போர் தொடங்கினால், தங்களை தற்காத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் தெரிவித்துள்ளது.
News November 10, 2025
Cinema Roundup: ‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா அப்டேட்

*பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் ராஜ் எலிமினேட் ஆனார். *‘ஜனநாயகன்’ இசைவெளியீட்டு விழா, டிச.27-ல் மலேசியாவில் நடைபெறும் என தகவல். *சித்தார்த்தின் அடுத்த படத்தை ‘டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்குகிறார். *மகேஷ்பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் நடிப்பதாக தகவல். *ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.


