News October 8, 2025

திருச்சி: வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு

image

திருச்சி பொன்மலை ரயில் நிலையம் வழியாக கடந்த 27ஆம் தேதி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தாக்குதலில் ஈடுபட்டது திருச்சியை சேர்ந்த தேன்ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் தேன்ராஜை நேற்று கைது செய்தனர்.

Similar News

News October 8, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 14-ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வரும் 15-ம் தேதியும், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்

News October 8, 2025

திருச்சி வந்த துணை முதலமைச்சர்

image

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டு, திருச்சி வந்தடைந்தார். அவரை அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

News October 8, 2025

திருச்சி: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. ஆரம்ப தேதி: 21.10.2025
6. கடைசி தேதி: 20.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE <<>>. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!