News April 15, 2024

நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகரிக்கும்

image

இந்தியாவில் நடப்பாண்டு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், நீண்டகால அடிப்படையில் சராசரி மழைப்பதிவு 106% ஆக பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பருவமழை அதிகரிப்பதற்கு, இந்திய பெருங்கடல் இருமுனை உருவாக்கம் மற்றும் பசிபிக் பகுதியில் உருவாகும் ‘லா நினா’ காரணமென வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Similar News

News November 3, 2025

பள்ளிகளுக்கு 10 நாள்கள் விடுமுறை… எப்படி தெரியுமா?

image

பள்ளிகளுக்கு வார இறுதி நாள்கள் மூலம் மாதந்தோறும் 8 நாள்கள் விடுமுறை கிடைக்கும். நவம்பரில் கூடுதலாக ஒரு சனி, ஞாயிறு உள்ளதால் 10 நாள்கள் விடுமுறையாகும். சனி, ஞாயிறு (நவ.1, 2) லீவு முடிந்து மாணவர்கள் இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர். மேலும், நவ. 8, 9, 15, 16, 22, 23, 29, 30-களிலும் லீவுதான். நவ.14 அன்று குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும், ஆனால் விடுமுறை கிடையாது.

News November 3, 2025

ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை

image

நவம்பர் மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 40 புள்ளிகள் உயர்ந்து 83,978 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 புள்ளிகள் உயர்ந்து 25,763 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. மகிந்திரா, டாடா, SBI பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், மாருதி சுசூகி, TCS நஷ்டத்தை சந்தித்துள்ளன.

News November 3, 2025

தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது SC

image

தெரு நாய்கள் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி <<18184221>>தமிழகம்<<>> உட்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகினர். மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அதை ஆய்வு செய்ய உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், வரும் 7-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!