News October 8, 2025
விஜய்காந்த் வீட்டில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். சாலிகிராமத்திலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஸ்டாலின், இபிஎஸ், சீமான், நயினார், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகை கௌதமி, எஸ்.ஏ.சந்திரசேகர், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு இன்று அவரது உடல் தகனம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News October 8, 2025
கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின் ரோஹித்தின் முதல் பேச்சு

கேப்டன் பதவி பறிபோன பிறகு முதல்முறையாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதை சரியாக பயன்படுத்த முயற்சி செய்வதாகவும், அணியின் வெற்றிக்கு சிறு காரணமாக இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 8, 2025
தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக <<17946346>>தஷ்வந்துக்கு<<>> எதிராக முறையான ஆதாரம் இல்லை என SC தெரிவித்துள்ளது. குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட DNA மாதிரிகளும் குற்றச்சம்பவத்துடன் ஒத்துப்போகவில்லை. ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட CCTV காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் தான் என்பது முறையாக உறுதிபடுத்தவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது.
News October 8, 2025
BIG BREAKING: மன்னிப்புக் கேட்டார் சீமான்

நடிகை (விஜயலட்சுமி) குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு SC-யில் சீமான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நடிகை தொடர்பாக தனது அனைத்து கருத்துகளையும் பேட்டிகளையும் திரும்ப பெறுவதாகவும், நடிகைக்கு எதிராக ஊடகங்களில் இனி எந்த கருத்தையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் சீமான் உறுதியளித்துள்ளார். மேலும், நடிகை தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.