News October 8, 2025

ஐசிசி விருது பட்டியலில் 3 இந்தியர்கள்

image

ஐசிசி செப்டம்பர் மாதத்திற்கான வீரர், வீராங்கனை விருது பட்டியலில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கோப்பையில் 314 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவும், 17 விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப் யாதவும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதே போல மகளிர் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்கள் விளாசிய ஸ்மிருதி மந்தானா இடம்பெற்றுள்ளார். இதில், அதிக வாக்கு பெறுவோருக்கு விருது வழங்கப்படும்.

Similar News

News October 8, 2025

தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக <<17946346>>தஷ்வந்துக்கு<<>> எதிராக முறையான ஆதாரம் இல்லை என SC தெரிவித்துள்ளது. குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட DNA மாதிரிகளும் குற்றச்சம்பவத்துடன் ஒத்துப்போகவில்லை. ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட CCTV காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் தான் என்பது முறையாக உறுதிபடுத்தவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது.

News October 8, 2025

BIG BREAKING: மன்னிப்புக் கேட்டார் சீமான்

image

நடிகை (விஜயலட்சுமி) குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு SC-யில் சீமான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நடிகை தொடர்பாக தனது அனைத்து கருத்துகளையும் பேட்டிகளையும் திரும்ப பெறுவதாகவும், நடிகைக்கு எதிராக ஊடகங்களில் இனி எந்த கருத்தையும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் சீமான் உறுதியளித்துள்ளார். மேலும், நடிகை தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

News October 8, 2025

யார் இந்த தஷ்வந்த்?

image

சென்னையில் 2017-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த அவர், தனது அம்மாவையும் கொலை செய்தார். இந்த இரு வழக்குகளிலும் 46 வருடம் சிறை, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அம்மா கொலை வழக்கில், அவரின் அப்பா பிறழ்சாட்சியாக மாறியதால், அந்த வழக்கில் இருந்து <<17946346>>தஷ்வந்த்<<>> விடுவிக்கப்பட்டார்.

error: Content is protected !!