News April 15, 2024

துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை துறந்த தம்பதி

image

குஜராத்தை சேர்ந்த தம்பதி, துறவிகளாக மாற ₹200 கோடி சொத்துகளை தானமாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுமான நிறுவன அதிபரான பாவேஸ் பண்டாரியும், அவரது மனைவியும் பிப்ரவரி மாதம் 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று, சொத்துகளை தானம் அளித்தனர். இந்த மாத இறுதியில் 2 பேரும் ஜைன துறவறம் காணவுள்ளனர். 2022இல் மகளும், மகனும் சிறுவயதில் துறவறம் பூண்டதை பின்பற்றி, இவர்களும் துறவறம் காணவுள்ளனர்.

Similar News

News January 14, 2026

சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

image

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.

News January 14, 2026

அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், EPS-யை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று தமமுகவின் நிறுவனர் <<18845319>>ஜான் பாண்டியன்<<>>, தாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் EPS இறங்கியுள்ளார். வரும் 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்ய அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.

News January 14, 2026

இது ரவுடித்தனம். சுதா கொங்கரா டைரக்ட் அட்டாக்!

image

முகம் தெரியாத ID-க்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு மோசமான வகையில் அவதூறு பரப்புகிறார்கள் என சுதா கொங்கரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல் ரீதியான எதிர்ப்பு இல்லை என குறிப்பிட்ட அவர், வெளிவராத படத்தின் நடிகரின் ரசிகர்களின் செய்வது என நேரடியாக விஜய் ரசிகர்களை குற்றம் சாட்டினார். மேலும், இது ரவுடித்தனத்தை என சுட்டிக்காட்டி, அதனை தாங்கள் எதிர்த்து போராடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!