News October 7, 2025
பள்ளியில் சுருண்டு விழுந்து மாணவன் மரணம்

சென்னை அருகே குன்றத்தூரில் பள்ளியிலேயே சுருண்டு விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் வெங்கடேஷ்(16), வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான். இதனையடுத்து, ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது. காலாண்டு விடுமுறையில் அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதே இறப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
Similar News
News October 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 482 ▶குறள்: பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. ▶பொருள்: காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
News October 8, 2025
விஜய் மீது வன்மம் இல்லை: திருமாவளவன்

விஜய் மீது எந்த வன்மமும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கரூர் துயரத்தில் விஜய்யை சிறைப்படுத்த வேண்டும் என விசிக வலியுறுத்தவில்லை என்றும் ஆனால், அவர் தார்மீக பொறுப்பு ஏற்காததால் தான் விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடக்க கூடாது என்கிற படிப்பினையை விஜய் உள்பட எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பெற வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News October 8, 2025
உயர்கல்வித்துறையை சீரழித்த திமுக அரசு: அன்புமணி

உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நான்கரை ஆண்டுகளில் 35 புதிய கல்லூரிகள் உருவாக்கியிருந்தாலும், ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்காததால், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்று அன்புமணி சாடியுள்ளார்.