News October 7, 2025

குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்கிறதா?

image

EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பென்சன் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.10, 11-ல் நடைபெறவுள்ள EPFO மத்திய அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு பென்சன் தொகை உயரவுள்ளது. 2014-ல் ₹1,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ₹1 கூட உயர்த்தப்படவில்லை.

Similar News

News October 8, 2025

Sanitation Workers உயிரிழந்தால் ₹35 லட்சம் இழப்பீடு: UP CM

image

உ.பி.,யில் தூய்மை பணியாளர்கள் விபத்திலோ (அ) எதிர்பாராத விதமாகவோ உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ₹35 – ₹40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என CM யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்துடன், ₹5 லட்சம் காப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில், பணியின்போது தூய்மை பணியாளர் உயிரிழந்த நிலையில் ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 8, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News October 8, 2025

மோடி முதல்வரான கதை (1/2)

image

PM மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்(அக்.7) குஜராத்தின் CM பதவியை ஏற்றார். சங்கர்சிங் வகேலா, கேசுபாய் படேல் போன்ற தலைவர்கள் கோலோச்சிய குஜராத்தில் மோடி CM பதவியை பிடித்தது எப்படி? 67 ஆக இருந்த பாஜக MLA-க்கள் பலம், 1995-ல் 121 ஆக உயர, குஜராத் அமைப்பு செயலாளரான மோடி ஆதரித்த, கேசுபாய் படேல் முதல்வரானார். சங்கர்சிங் வகேலாவின் கலகத்தை அடுத்து, 2 தரப்புக்கும் பொதுவான சுரேஷ் மேத்தா CM ஆனார்.

error: Content is protected !!