News October 7, 2025
கரூர் சம்பவத்தை தினமும் பேசாதீங்க: கமல்ஹாசன்

கரூர் உயிரிழப்பு என்பது சோகம் தான், ஆனால் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் சோகம் அகலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோவில் சிகிச்சையில் உள்ள ராமதாஸ், வைகோ ஆகியோரிடம் உடல்நலம் விசாரித்த கமல், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரூர் சம்பவம் பற்றி தினமும் பேச வேண்டாம் என்ற அவர், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதில் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார்.
Similar News
News October 7, 2025
2-வது ரன்னுக்காக 6 ஆண்டுகள் காத்திருந்த துயரம்

உங்களுக்கு SL முன்னாள் கேப்டன் மார்வன் அட்டப்பட்டு தெரியுமா? அவர் அறிமுக டெஸ்டில் 2 இன்னிங்ஸிலும் டக் அவுட். 21 மாதங்களுக்கு பிறகு 2-வது வாய்ப்பிலும் சொதப்பல் (0,1). 17 மாதங்கள் காத்திருந்தவருக்கு 3-வது முறையும் ஏமாற்றம் (0,0). யாராக இருந்தாலும் உடைஞ்சு போயிருப்பாங்க. 3 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுத்தவர், டோட்டலா 16 சதங்கள் (6 இரட்டைசதம்) விளாசினார். நம்பிக்கையை மட்டும் இழந்துடாதீங்க!
News October 7, 2025
நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

முன்னோடியான கண்டுபிடிப்புகள், சமூகத்தில் முக்கியமான தாக்கம், அல்லது மனிதநேயம் சார்ந்த முயற்சிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நோபல் வழங்கப்படுகிறது. நோபல் பரிசு வென்ற இந்தியாவை சேர்ந்த, இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் யார் என்று தெரியுமா? மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த வருடம் நோபல் பரிசு நமக்கு கிடைக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க?
News October 7, 2025
BREAKING: தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் தெரிவித்திருந்தார். இந்தாண்டில் 8 பேர் டெங்குவால் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், காய்ச்சல் பரவல் அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.