News October 7, 2025
மனசாட்சியுடன் பேசுங்கள்: முத்துசாமி

கரூர் துயரில் அரசின் பாதுகாப்பு குறைபாடு குறித்து அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட அனைத்து வீடியோக்களையும் பார்த்துவிட்டு மனசாட்சியுடன் பேசுங்கள். திமுக பயப்படவில்லை என்ற அவர், விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
Similar News
News October 7, 2025
நாளை முதல் Googlepay, Phonepe-ல் கிடையாது!

Googlepay, Phonepe உள்ளிட்ட பணபரிமாற்ற செயலிகளில் பணம் அனுப்பும்போது PIN உள்ளிடும் வசதியை நீக்க NPCL முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக, FINGER PRINTS, FACE RECOGNITION வசதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பணம் அனுப்பும்போது பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். SHARE IT.
News October 7, 2025
முன்னாள் பிரதமர் தேவகவுடா ஹாஸ்பிடலில் அனுமதி

நாட்டின் முன்னாள் பிரதமரும் கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவருமான H.D.தேவகவுடா (92), உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணிப்பால் ஹாஸ்பிடல் வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்ச்சல் மற்றும் நோய்த்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News October 7, 2025
சிம்புவுக்கு அரசி ஆகிறாரா சமந்தா?

வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இப்பட டைட்டில் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியான நிலையில், அதில் சிம்பு வைத்திருக்கும் அரிவாள், ‘வட சென்னை’ படத்தில் ராஜனை (அமீர்) கொலை செய்ய பயன்படுத்தியது என்று நெட்டிசன்கள் decode செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்பு – சமந்தா ஜோடி எப்படி இருக்கும்?