News October 7, 2025
கரூர் துயரம்.. நேரில் ஆறுதல் கூறிய நடிகை அம்பிகா

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் கூறினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் இங்கு வந்ததில் எந்த அரசியலும் இல்லை; யாரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேச வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வந்திருக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், குழந்தைகளை அழைத்து வந்தது பெற்றோர்களின் தவறு; இதுபோன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க சரியான நடவடிக்கை தேவை என்றார்.
Similar News
News October 7, 2025
சிம்புவுக்கு அரசி ஆகிறாரா சமந்தா?

வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இப்பட டைட்டில் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியான நிலையில், அதில் சிம்பு வைத்திருக்கும் அரிவாள், ‘வட சென்னை’ படத்தில் ராஜனை (அமீர்) கொலை செய்ய பயன்படுத்தியது என்று நெட்டிசன்கள் decode செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்பு – சமந்தா ஜோடி எப்படி இருக்கும்?
News October 7, 2025
குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்கிறதா?

EPS திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச பென்சன் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.10, 11-ல் நடைபெறவுள்ள EPFO மத்திய அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 11 ஆண்டுகளுக்கு பிறகு பென்சன் தொகை உயரவுள்ளது. 2014-ல் ₹1,000 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ₹1 கூட உயர்த்தப்படவில்லை.
News October 7, 2025
BREAKING: கரூர் செல்கிறார் விஜய்

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வீடியோ காலில் பேசிய நிலையில், விஜய் நேரில் செல்வாரா இல்லையா என கேள்வி எழுந்தது. இந்நிலையில், கரூர் செல்ல ஏற்பாடுகளை செய்துவரும் விஜய், பாதுகாப்பு கோரி அம்மாவட்ட போலீஸுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதற்கு உரிய பதில் கிடைக்காததால் கலெக்டரிடம் மனு அளிக்க தவெக தரப்பு திட்டமிட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விஜய் கரூர் செல்லவுள்ளார்.