News October 7, 2025

நெல்லை: மின் கம்பங்களில் பேனர் வேண்டாம் – இபி

image

திருநெல்வேலி மின் பகிர்மான கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மின் கம்பங்களில் கொடி பதாகை பேனர் போன்றவற்றை கட்டக்கூடாது. அவ்வாறு செய்வதால் மின் சேவைக்கு இடையூறு ஏற்படும். மின் பணியாளர்கள் கம்பங்களில் ஏறி பணி செய்வதற்கு சிரமப்படுவார்கள் எனவே மின்கம்பங்களில் பேனர்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 7, 2025

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

image

நெல்லை சேரன்மகாதேவி கூனியூரில் கடந்த 2013ல் அருணாச்சலம் (எ) குமார் பாண்டியன் என்பவரை கொலை செய்த வழக்கில் நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பளித்தார். கொலையில் தொடர்புடைய பார்வதி சங்கர் (எ) அருணாச்சலம் முருகன் லெட்சுமணன் ராஜேஷ் (எ) ராஜேஷ் கண்ணா ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.

News October 7, 2025

21 கொலை வழக்குகளில் தண்டனை; எஸ்பி பெருமிதம்

image

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 21 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும் 71 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 22 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார்.

News October 7, 2025

நெல்லையில் நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய சம்பவம்

image

சேரன்மகாதேவி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சாட்சி, நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக கோபத்தில் கொதித்து, அவரை நோக்கி செருப்பை வீசினார். மேலும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குள் ரகளை செய்தார். இதை அறிந்து அங்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

error: Content is protected !!