News October 7, 2025
மீண்டும் பணியை தொடங்கினார் விஜய்

கரூர் துயரத்திற்கு பிறகு அமைதியாக இருந்த விஜய், மீண்டும் அரசியல் பணியை தொடங்கி இருக்கிறார். தற்போது, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக <<17937429>>வீடியோகால் <<>>மூலம் பேசி வரும் விஜய், விரைவில் கரூர் வருவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், இன்று ஆனந்த், நிர்மல் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவின் அடிப்படையில், எந்த நேரத்திலும் விஜய் கரூருக்கு செல்ல வாய்ப்புள்ளது.
Similar News
News October 7, 2025
Pilot-கள் Scent அடிக்கமாட்டாங்க; ஏன் தெரியுமா?

ஒவ்வொரு பயணத்துக்கு முன்னதாகவும் விமானிகள் மது அருந்தி இருக்கிறார்களா என சோதனை செய்யப்படுகிறது. Scent/perfume-களில் ஆல்கஹாலும் கலந்திருப்பதால், சோதனையின் போது அவர்கள் போதையில் இருப்பதாக காட்டும். அதனால், பைலட்கள் Scent அடிப்பதை தவிர்க்கிறார்கள். மேலும், ஆல்கஹால் இருக்கும் sanitizers, mouthwasher-களை கூட விமானிகள் பயன்படுத்துவதில்லை. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News October 7, 2025
₹1,000 உரிமைத் தொகை கிடைக்காது: இதை செய்யாதீங்க

மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள், முக்கியமாக கவனிக்க வேண்டியது செல்போன் எண். ஆதார், வங்கி பாஸ்புக்குடன் ஒரே எண் இணைக்கப்பட்டிருப்பது அவசியம். அப்போதுதான், பயனாளர்களை அரசால் எளிதில் அடையாளம் காண முடியும். வெவ்வேறு எண் இருந்தால், அரசின் குறுஞ்செய்தி சென்றடைவதிலும் சிக்கல் எழும். நவம்பர் வரை உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
News October 7, 2025
கரூர் சம்பவத்தை தினமும் பேசாதீங்க: கமல்ஹாசன்

கரூர் உயிரிழப்பு என்பது சோகம் தான், ஆனால் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் சோகம் அகலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை அப்போலோவில் சிகிச்சையில் உள்ள ராமதாஸ், வைகோ ஆகியோரிடம் உடல்நலம் விசாரித்த கமல், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரூர் சம்பவம் பற்றி தினமும் பேச வேண்டாம் என்ற அவர், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதில் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார்.