News April 15, 2024

பாமக இல்லை என்றால் அதிமுக அரசு கவிழ்ந்திருக்கும்

image

பாமக இல்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது என அன்புமணி விமர்சித்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு தருவதற்கு சம்மதம் தெரிவித்ததால் மட்டுமே அதிமுக உடன் 2019இல் கூட்டணி சேர்ந்ததாக கூறிய அவர், கொடுத்த வாக்குறுதியை முறையாக இபிஎஸ் நிறைவேற்றவில்லை என்றார். மேலும் பேசிய அவர், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கூட அதிமுக அரசு முறையாக இயற்றாமல் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News November 10, 2025

இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்

image

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. குருவாயூர் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட், சேது சூப்பர்ஃபாஸ்ட், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து மட்டுமே புறப்படும், எழும்பூர் செல்லாது. அதேபோல், அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயில் தாம்பரம், எழும்பூர் வழியாக இயங்காது.

News November 10, 2025

விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP

image

திமுக கூட்டணி கட்சி MP-ஆன சு.வெங்கடேசன், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையாம், சினிமா தொடர்பான சந்திப்பாம். ‘வேள்பாரி’ நாவலை 3 பாகங்களாக ஷங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 515 ▶குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ▶பொருள்: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி, இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

error: Content is protected !!