News October 7, 2025

விஜயகாந்த் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

image

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால், பிரேமலதாவின் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மூத்த சகோதரி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கமான நிகழ்வு நடந்தது, தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Similar News

News October 7, 2025

கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடி கைது

image

கரூர் துயர சம்பவத்தில் அவதூறு கருத்து கூறியதாக, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வரதராஜனை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கரூர் துயர சம்பவ வழக்கில் விஜய் குறித்து ஐகோர்ட் நீதிபதியின் கருத்தை கடுமையாக விமர்சித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாகவும், ஆளும் திமுக அரசை சாடியும் இருந்தார். இந்நிலையில், அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

News October 7, 2025

தமிழகத்தை சுனாமி தாக்கப் போகிறதா? CLARITY

image

ஆழ்கடலில் மட்டுமே காணப்படும் டூம்ஸ்டே மீன்கள், கடலின் மேற்பரப்புக்கு வந்தால், அது பேரழிவின் அறிகுறி என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் மீனவர்களின் வலையில் இவ்வகை மீன்கள் சிக்கியுள்ளன. 2 மாதங்களுக்கு முன்பும், இவை காணப்பட்டன. இதனால், வங்கக் கடலில் சுனாமி வரப்போகிறதா என அச்சம் எழுந்தது. இந்நிலையில், இதற்கு அறிவியல் ஆதாரமில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

News October 7, 2025

11,12 வகுப்பு மாணவிகளுக்கு Scholarship; அப்ளை பண்ணுங்க!

image

CBSE 10-ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் Single Child-ஆக இருக்கும் மாணவிகளுக்கு 11, 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதத்திற்கு ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் அக்.23-ம் தேதிக்குள் <>cbse.gov.in<<>> – ல் அப்ளை பண்ணுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!