News April 15, 2024
4314 பேர் தபால் வாக்கு பதிவு

ஈரோடு மக்களவை தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2843 பேர் மற்றும் ராணுவத்தில் உள்ள 3 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடந்த 2 ஆம் கட்ட பயிற்சியின் போது 1468 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மக்களவை தொகுதியில் மட்டும் இதுவரை 4314 பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 16, 2025
ஈரோடு – சம்பல்பூர் சிறப்பு ரயில் நீட்டிப்பு

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து காலை 11:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வரும் சிறப்பு ரயில் (08311) நாளை(செப்.17) முதல் வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை (வாரந்தோறும் புதன்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக ஈரோட்டில் இருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11:15 மணிக்கு சம்பல்பூர் செல்லும் ரயில் (08312) நவ.28 வரை (வெள்ளி தோறும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
ஈரோடு: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் மக்கள்!

ஈரோடு: அந்தியூர் வனப்பகுதி ஒட்டிய 1500-க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று(செப்.15) தாலுகா அலுவலகத்திற்கு முன்பு முற்றுகையிட்டனர். அயன் பட்டா கோரிக்கைக்காக நின்ற மக்களை இரவு 8:00 மணி ஆகியும் கலெக்டர் சந்திக்கவில்லை. ஆகையால், இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் செல்ல முடிவெடுத்துள்ளனர்.
News September 16, 2025
ஈரோடு பிறந்த தினம் இன்று!

கோயமுத்தூர் ஜில்லாவில் சிறு கிராமமாக இருந்த ஈரோடு, 16.9.1871ல் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு நகர பரிபாலன சபை அமைக்கப்பட்டது. தற்போது மாவட்ட தலைநகராக, மாநகராட்சியாக ஈரோடு நகரம் உயர்வடைந்துள்ளது. ஈரோடு நகர சபை உருவாகி 154 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 155-ஆவது ஆண்டு தொடங்குகிறது.