News April 15, 2024
கோவை: ஒரு டன் இளநீரின் பண்ணை விலை உயர்வு

ஆனைமலை தாலுகா பகுதியில் இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்ந்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இளநீர் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளது என்பதால், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 38 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் இளநீரின் விலை ரூ.15000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
கோவை: தற்போது வரை 57 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரை 251 விபத்துகளில், 62 இளைஞர்கள் பலியாகினர். இந்த நிலையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் தற்போது வரை 207 விபத்துக்கள் நடந்து, அதில் 57 இளைஞர்கள் பலியாகி உள்ளனர். மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிய 11 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது.
News September 18, 2025
இஸ்ரோ தலைவர் கோவையில் பேட்டி

கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், ககன்யான் திட்டத்தில் 85% சோதனைகள் நிறைவு பெற்றுள்ளதை தெரிவித்தார். டிசம்பரில் ஆளில்லா ராக்கெட் வயோமித்ராவுடன் ஏவப்படும் என்றும், 2027 மார்சில் மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றார். மேலும் சந்திரயான்-4 திட்டத்தில் நிலவில் மாதிரிகளை சேகரிக்க, AI ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
News September 18, 2025
கோவை மக்களே: அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கோவை மாவட்டத்தில் தொழில் முனைவோராக விருப்பமுள்ள 18 – 45 வயதிற்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஆடைகளை பயன்படுத்தி பைகள் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விபரங்களுக்கு 70129 55419, 89405 67882 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.