News October 7, 2025
சே குவேரா பொன்மொழிகள்

▶புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. ▶சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழியாகும். ▶விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.
Similar News
News October 7, 2025
விஜய் அதிரடி முடிவு: யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

கரூர் துயரம் விஜய்யின் தீவிர அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. இவ்விவகாரத்தில் 3 அறிக்கை, ஒரு வீடியோ வெளியிட்டு அமைதியாக இருக்கிறார்; ஊடகங்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில், இனியும் காலதாமதம் செய்தால், அது கட்சியின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும் என கட்சி நிர்வாகிகள் அவரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, கரூர் செல்வதற்கு முன், ஊடகங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News October 7, 2025
அஜீரண கோளாறுக்கு இந்த மூலிகை தேநீர் தான் பெஸ்ட்!

வயிறு உப்புசம், வாயு தொந்தரவு & செரிமான பிரச்னைகளால் அவதிப்படுவோர் நிவாரணம் பெற அன்னாசிப்பூ தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அன்னாசிப்பூ, சுக்கு, மிளகு, மஞ்சள், சோம்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அன்னாசிப்பூ தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
News October 7, 2025
விஜய் ரசிகர்களுக்கு அண்ணாமலை அட்வைஸ்

கரூர் விவகாரத்தில் நீதிபதி கூறும் கருத்துகளை அரசியல் ஆக்கக்கூடாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். நீதிபதியின் குடும்பத்தையெல்லாம் இழுத்து திட்டுவதாக கூறிய அவர், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறித்தினார். மேலும், கரூர் விவகாரத்தில் வழக்கு விசாரணை முடியும் முன்பே நீதிபதி, தவெக மீது கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியது சரியானது இல்லை என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.