News October 7, 2025
CJI மீது செருப்பு வீச முயன்றவர் விடுவிப்பு

CJI பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் யாரும் புகார் அளிக்காத நிலையில், அவர்களின் சம்மதத்தை பெற்று ராகேஷை விடுவித்துள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக வழக்கறிஞர் ராகேஷிடம் டெல்லி போலீசார் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்.
Similar News
News October 7, 2025
கடன் சுமையிலிருந்து வெளிவர தேங்காய் பரிகாரம்!

*உரித்த தேங்காயில் சிவப்பு நிற துணி வைத்து, அதை ஒரு முடிச்சாக கட்டுங்கள் *ஆலமரம் அல்லது அரச மரத்திடம் சென்று கடன் சுமை தீர வேண்டும் என பிரார்த்தனை செய்து தேங்காயை அந்த மரத்தில் கட்டிவிட்டு, வீட்டிற்கு வர வேண்டும் *கையில் தேங்காயை வைத்துக்கொண்டு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் *இதனை செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம் *மாலை 5 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. SHARE IT.
News October 7, 2025
சற்றுநேரத்தில் இபிஎஸ் உடன் சந்திப்பு.. கூட்டணி பேச்சு

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர் ஆகியோர் இன்று காலை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ்ஸை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின்போது, கூட்டணியை வலுப்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. குறிப்பாக, கரூர் துயர விவகாரத்தில் விஜய் முடங்கி இருப்பதால், அவருடன் கூட்டணிக்கு செல்ல காத்திருந்த சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
News October 7, 2025
Sports Roundup: களத்திற்கு திரும்பும் ரிஷப் பந்த்

*தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ரிஷப் பந்த் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடவுள்ளார். *மகளிர் உலக கோப்பையில், நியூசிலாந்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது. *M15 வின்ஸ்டன் ஓபன் டென்னிஸில் இந்தியாவின் தக்ஷினேஷ்வர் சுரேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 36 – 28 என்ற புள்ளிகள் கணக்கில் உபி யோத்தாஸை வீழ்த்தியது.