News April 15, 2024
வரலாறு காணாத அளவில் நகை, பணம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலையொட்டி வரலாறு காணாத அளவில் நாடு முழுவதும் ₹4,650 கோடிக்கு நகை, பணம், போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதுமே ₹3,745 கோடி அளவுக்கு நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தமுறை முதற்கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, முன்பை விட கூடுதலாக ₹905 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ₹450 கோடி.
Similar News
News November 10, 2025
விஜய்யை சந்தித்த திமுக கூட்டணி கட்சி MP

திமுக கூட்டணி கட்சி MP-ஆன சு.வெங்கடேசன், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து பேசியதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லையாம், சினிமா தொடர்பான சந்திப்பாம். ‘வேள்பாரி’ நாவலை 3 பாகங்களாக ஷங்கர் படமாக்கும் நிலையில், அதில் விஜய் ஒரு பாகத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது. அது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 515 ▶குறள்: அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ▶பொருள்: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி, இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.
News November 10, 2025
அண்ணாமலையின் ஃபிட்னஸ்.. வாழ்த்திய PM மோடி

கோவாவில் நடைபெற்ற ‘அயர்ன்மேன் 70.3’ டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்த அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவை PM மோடி வாழ்த்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இவை ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டிரையத்லானில் 1.8 கி.மீ., நீச்சல், 90 கி.மீ., சைக்கிளிங், 21.1 கி.மீ., ரன்னிங் செய்ய வேண்டும்.


