News October 6, 2025
பாஜக நிர்வாகிக்கு எதிராக அண்ணாமலை புகார்

கோவையில் அண்ணாமலையின் பெயரை கூறி விபத்தில் இறந்தவரின் குடும்பத்திடம் இருந்து, பாஜக நிர்வாகி பணம் பறிக்க முயன்றது சர்ச்சையானது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தவறு செய்தது பாஜக நிர்வாகியாக இருந்தாலும் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 7, 2025
ARATTAI-யில் இதை கவனிச்சீங்களா?

வாட்ஸ்ஆப்புக்கு மாற்றான இந்திய தயாரிப்பு என்று களமிறங்கிய ZOHO-வின் ‘அரட்டை’ செயலிக்கு உண்மையிலேயே செம வரவேற்பு கிடைத்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் உள்ளது போலவே இதிலும் வாய்ஸ் / வீடியோ கால், end-to-end என்கிரிப்ஷன் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், பயனரின் மெசேஜ்களை ZOHO தன் சர்வரில் சேமித்து வைக்கிறது என Money Control செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இது தனியுரிமை பாதுகாப்பை பாதிக்கக் கூடும்.
News October 7, 2025
அனைவரும் நலமாக உள்ளோம்: விஜய் தேவரகொண்டா

நடிகர் <<17931989>>விஜய் தேவரகொண்டா<<>> சென்ற கார் விபத்திற்கு உள்ளான நிலையில், அனைவரும் நலமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நிகழ்ந்தது சின்ன விபத்துதான் எனவும், தலையில் சிறிது வலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பிரியாணியும், நல்ல தூக்கமும் அந்த வலியை போக்கிவிடும் எனவும், அனைவரும் நல்லபடியாக வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News October 7, 2025
நாட்டு மக்கள் CJI-க்கு ஆதரவாக நிற்க வேண்டும்: சோனியா

CJI BR கவாய் மீதான தாக்குதல், அரசியல் அமைப்புச்சட்டத்தின் மீதான தாக்குதல் என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதை கண்டிக்க வார்த்தைகளே இல்லை எனவும், CJI-க்கு ஆதரவாக நாட்டு மக்கள் துணை நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கேரள CM பினராயி விஜயன், தமிழ்நாடு CM ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.