News April 15, 2024

அதிரடியாக சதம் அடித்தும் கொண்டாடாத ரோஹித்

image

சிஎஸ்கேக்கு எதிராக சதம் அடித்தும் ரோஹித் கொண்டாடாமல் இருந்ததாக ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ புகழ்ந்துள்ளார். 63 பந்துகளில் 105 ரன்களுடன் ரோஹித் அவுட் ஆகாமல் இருந்தார். இதுகுறித்து பேட்டியளித்த பிரட் லீ, முதல் பந்தில் இருந்தே வெற்றி என்ற லட்சியத்துடன் ரோஹித் விளையாடியதாகவும், இதனால் சதம் அடித்தபிறகு பேட்டை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை என்றும் பாராட்டினார்.

Similar News

News August 17, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 17, 2025

அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.

News August 17, 2025

‘புஷ்பா’ படத்தை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ்?

image

இன்றைய சினிமாவில் சட்டவிரோத செயல்களை செய்யும் கேரக்டர்கள் தான் ஹீரோவாக உள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். கெட்டது செய்யும் ஹீரோக்கள் வெல்ல வேண்டும் என இன்றைய ரசிகர்கள் விரும்புவதாகவும், இந்த மனநிலை பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் ஹீரோவை கொண்டாடிய ‘புஷ்பா’ படத்தைதான் அவர் சாடியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!