News October 6, 2025
சற்றுமுன்: கனமழை பொளந்து கட்டும்

தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. இன்று நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
Similar News
News October 6, 2025
தமிழ்நாடு மது விற்பனையில் எந்த இடம் தெரியுமா?

2025 நிதியாண்டில் மாநிலம் வாரியாக, விஸ்கி, வோட்கா, ரம், ஜின், பிராந்தி போன்ற மதுபானங்கள் விற்பனை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதில், தென்னிந்திய மாநிலங்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. எந்த மாநிலம் எந்த இடத்தில் உள்ளது என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், கடைசி இடம் யாருக்கு தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 6, 2025
விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா? WAY2NEWS சர்வே

கரூர் துயரச் சம்பவத்துக்கு பின், விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா என்பது அரசியலிலும் பொதுவெளியிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பி வே2நியூஸ் ஒரு சர்வே நடத்தியது. லட்சக்கணக்கான வாசகர்கள் இதில் வாக்களித்தனர். அதன்படி, சரிபாதி பேர் (50%) விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளது என்றும், 50% பேர் இல்லையென்றும் வாக்களித்துள்ளனர். உங்கள் கருத்து?
News October 6, 2025
அனைத்து ஃபார்மட்களிலும் ஹர்ஷித் ராணா.. ஏன்?

ஆஸி.,க்கு எதிரான டி20, ODI போட்டிகளுக்கான அணியில், ஹர்ஷித் ராணா இடம்பெற்றிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. IPL-ல் KKR-க்காக விளையாடியதால் கம்பீர் அவருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத அவருக்கு, அனைத்து ஃபார்மட்களிலும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஷமி, சிராஜை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.