News October 6, 2025

மதுவில் தத்தளித்த ஊர்.. செஸ் ஊராக மாற்றிய டீக்கடைக்காரர்!

image

திருச்சூரின் மரோட்டிச்சல் கிராமம் ஒருகாலத்தில் குடிபோதையால் தத்தளித்து கொண்டிருந்தது. ஆனால் டீக்கடைக்காரர் உன்னிகிருஷ்ணன் என்பவரின் தொலைநோக்கு பார்வை ஊரை கரை சேர்த்தது. அவர் ஒரு சிறு முன்னெடுப்பாக ஒருவருக்கு செஸ் விளையாட சொல்லிக் கொடுக்க, ஊரே செஸ் விளையாட்டில் நாட்டம் கொண்டுள்ளது. 2018-ல் 1,600 பேர் ஒன்றாக விளையாடிய சாதனையும் படைத்த ஊர் இன்று செஸ் கிராமம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Similar News

News October 6, 2025

விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா? WAY2NEWS சர்வே

image

கரூர் துயரச் சம்பவத்துக்கு பின், விஜய்க்கு தலைமைப் பண்பு இருக்கிறதா என்பது அரசியலிலும் பொதுவெளியிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பி வே2நியூஸ் ஒரு சர்வே நடத்தியது. லட்சக்கணக்கான வாசகர்கள் இதில் வாக்களித்தனர். அதன்படி, சரிபாதி பேர் (50%) விஜய்க்கு தலைமைப் பண்பு உள்ளது என்றும், 50% பேர் இல்லையென்றும் வாக்களித்துள்ளனர். உங்கள் கருத்து?

News October 6, 2025

அனைத்து ஃபார்மட்களிலும் ஹர்ஷித் ராணா.. ஏன்?

image

ஆஸி.,க்கு எதிரான டி20, ODI போட்டிகளுக்கான அணியில், ஹர்ஷித் ராணா இடம்பெற்றிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. IPL-ல் KKR-க்காக விளையாடியதால் கம்பீர் அவருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத அவருக்கு, அனைத்து ஃபார்மட்களிலும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், ஷமி, சிராஜை ஏன் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

News October 6, 2025

BREAKING: கரூர் சென்றார் கமல்

image

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசனும் கரூருக்கு விரைந்துள்ளார். செந்தில் பாலாஜியுடன் சென்ற அவர், கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, கமல் ஆறுதல் கூற உள்ளார்.

error: Content is protected !!