News April 15, 2024
₹10 ஆயிரத்தை ₹34,700 கோடியாக்கிய சிங்கப் பெண்

இந்தியாவின் முன்னணி உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான பயோகானை நிறுவிய கிரண் மஸூம்தார் ஷா, கர்நாடகாவில் கடந்த 1953இல் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1978இல் ₹10,000இல் பயோகான் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தற்போது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹34,700 கோடியாக உயர்ந்துள்ளது. கிரண் மஸூம்தாரின் சொத்து மதிப்பு மட்டும் ₹23,247 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
தூத்துக்குடி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News January 13, 2026
நடப்பு ஐபிஎல் சாம்பியனுக்கு வந்த சோதனை

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் IPL போட்டிகள் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதன்பிறகு பாதுகாப்பு காரணங்களால் சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கவில்லை. இந்நிலையில் RCB அணியின் Home Game-கள் நவிமும்பை (5 போட்டி), ராய்ப்பூருக்கு ( 2 போட்டி) மாற்றப்படவுள்ளன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News January 13, 2026
பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் 1,03,123 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இவர்களுக்கு சாதனை ஊக்கத் தொகையாக ₹85 – ₹625 வரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்கு ₹3,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


