News April 15, 2024
FIR பதிவால் நயினார் நாகேந்திரனுக்கு வந்த இடையூறு

பண பறிமுதல் விவகாரத்தில் FIR பதிவு செய்யப்பட்டதால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 6இல் நெல்லை ரயிலில் அவருக்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது போலீசார் FIR போட்டுள்ள நிலையில், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News October 16, 2025
SPAM கால் தொல்லையா? இதை உடனே பண்ணுங்க

கடந்த சில ஆண்டுகளில் SPAM கால் வருவது அதிகரித்துள்ளது. கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தருவதாகக் கூறி மீண்டும் மீண்டும் அழைப்புகள் வருவது பலரையும் எரிச்சலடைய செய்கிறது. இதற்காக TRAI ஏற்கனவே DND என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. 1909 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது SMS செய்வதன் மூலமோ டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்கலாம். DND செயலி மூலம் TRAI-க்கு நேரடியாகப் புகார் செய்யலாம்.
News October 16, 2025
வாட்ஸ் ஆப்பில் வரும் அசத்தலான புது அப்டேட்

உங்களுக்கு பிடித்த CONTACTS-ன் ஸ்டேட்டஸை தவறவிடாமல் பார்க்கும் வகையில் புது அப்டேட் வாட்ஸ் ஆப்பில் வர உள்ளது. இதற்கான சோதனை இப்போது வாட்ஸ் ஆப்பின் பீட்டா வெர்ஷனில் நடைபெற்று வருகிறது. பயனர்கள் தங்களுக்கு பிடித்த CONTACT-ல் ஸ்டேட்டஸ் நோட்டிபிகேஷனை ஆன் செய்தால் போதும். இனி தேடி தேடி ஸ்டேட்டஸை பார்க்கும் கவலை உங்களுக்கு வேண்டாம். சூப்பர் அப்டேட்டா?
News October 16, 2025
‘அரசன்’ புரோமோவுக்கு செம ஹைப் கொடுத்த STR

சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் கேங்ஸ்டர் படமான அரசனின் ப்ரோமோ நாளை வெளியாகிறது. இதனிடையே புரோமோவை பார்த்து தியேட்டரில் சிம்பு வியந்துபோயுள்ளார். மேலும் ரசிகர்களை தியேட்டரில் பாருங்க என தனது ரசிகர்களிடம் சிம்பு கேட்டுக்கொண்டுள்ளார். 5 நிமிடம் கொண்ட இந்த புரோமாவுக்கான டிக்கெட் முன்பதிவு இப்போது பல இடங்களில் தொடங்கியுள்ளது.