News October 6, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மருதாணி இலையை அரைத்து பசையாக வைத்தால், கால் எரிச்சல் அடங்கும் *மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரத்தை அரைத்து, உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் கட்டினால் குணமாகும் *கிருமி நாசினி என்பதால், மருதாணி இட்டுக் கொள்வதால் நகச்சுத்தி வராது *மருதாணியை அரைத்து நீரில் கரைத்து, வடிகட்டி அந்த நீரில் வாய்க் கொப்பளித்தால், வாய்ப்புண் தொல்லை நீங்கும். SHARE IT.
Similar News
News October 6, 2025
CJI பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் முயற்சி ஏன்?

கஜுராஹோ கோயிலில் துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையின் தலையை மீண்டும் நிறுவ கோரிய மனு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது CJI பி.ஆர்.கவாய் தெரிவித்த கருத்து <<17750475>>சர்ச்சையானது<<>>. இதையடுத்து ‘நான் எல்லா மதங்களையும் சமமாக மதிக்கிறேன்’ என அவர் விளக்கம் அளித்தார். இன்று CJI பி.ஆர்.கவாய் மீதான <<17928342>>தாக்குதல் <<>>முயற்சிக்கு இது காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது.
News October 6, 2025
சற்றுமுன்: கனமழை பொளந்து கட்டும்

தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. இன்று நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், நாளை நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 6, 2025
மதுவில் தத்தளித்த ஊர்.. செஸ் ஊராக மாற்றிய டீக்கடைக்காரர்!

திருச்சூரின் மரோட்டிச்சல் கிராமம் ஒருகாலத்தில் குடிபோதையால் தத்தளித்து கொண்டிருந்தது. ஆனால் டீக்கடைக்காரர் உன்னிகிருஷ்ணன் என்பவரின் தொலைநோக்கு பார்வை ஊரை கரை சேர்த்தது. அவர் ஒரு சிறு முன்னெடுப்பாக ஒருவருக்கு செஸ் விளையாட சொல்லிக் கொடுக்க, ஊரே செஸ் விளையாட்டில் நாட்டம் கொண்டுள்ளது. 2018-ல் 1,600 பேர் ஒன்றாக விளையாடிய சாதனையும் படைத்த ஊர் இன்று செஸ் கிராமம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.