News October 6, 2025

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு

image

மயிலாடுதுறை நகரில் உள்ள பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து நேற்று அதிரடி சோதனை நடைபெற்றது. மயிலாடுதுறை பெசன்ட் நகர் கண்ணார தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 6 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர் மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தனர்.

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வு

image

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

News October 16, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

மயிலாடுதுறை காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். இணையத்தில் உங்களின் பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவிக்கபட்டது. மேலும் தகவல்களுக்கு Cyber Crime Help Line: 1930 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in இணையத்தளம் வாயிலாக புகாரளிக்கலாம்.

News October 16, 2025

மயிலாடுதுறை: 2 கிலோ குட்கா பறிமுதல்

image

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி உத்தரவின்படி போலீசார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டதில் 2கி குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த மயிலாடுதுறை பொட்டவெளி தெருவை சேர்ந்த பிரசாந்த் 35 என்பவரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!