News October 6, 2025
கரூர் துயரத்தில் உள்ளூர் ரவுடிகளுக்கு பங்கு: பிரேமலதா

கரூர் விஷயத்தில் விஜய்யை பக்கா பிளான், ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார்கள் என்று பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யை விரும்பி பார்க்க வந்த கூட்டம் செருப்பு வீசியிருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதை செய்தது உள்ளூர் ரவுடிகள் என்றும் அவர்களை இயக்கியது ஒரு முன்னாள் மந்திரி எனவும் அவர் சாடியுள்ளார். இந்த உண்மைகள் ஒரு நாள் வெளியே வரும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.
Similar News
News October 6, 2025
பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. rteadmission@tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பள்ளிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RTE அடிப்படையில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் முழுக் கல்விச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.
News October 6, 2025
பாகிஸ்தானுக்கு சரியான அடி: அமித்ஷா

மகளிர் உலகக் கோப்பையில் 88 ரன்களை வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு சரியான அடி கொடுத்து, இந்திய மகளிர் அணி தனது வலிமையை வெளிப்படுத்தியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய அணியை நினைத்து தேசமே பெருமைப்படுவதாகவும், அடுத்த வரும் போட்டிகளுக்கும் வெற்றிபெற வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News October 6, 2025
மழைக்காலத்தில் குடிக்க வேண்டிய மூலிகை தேநீர்!

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், கோழை, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.