News October 6, 2025
இந்தியாவை புதைப்போம்: பாக். அமைச்சர்

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய போர் விமானங்களை புதைத்ததை போல், இந்தியாவையும் புதைப்போம் என பாக்., அமைச்சர் கவாஜா எச்சரித்துள்ளார். போரில் தோற்ற பதற்றம் PM மோடி, அவரது சகாக்களிடம் தெரிவதாகவும், மீண்டும் அதுபோன்று முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, எல்லையில் அத்துமீறினால், உலக வரைபடத்தில் இருந்து பாக்., அகற்றப்படும் என இந்திய தலைமை தளபதி திவேதி எச்சரித்து இருந்தார்.
Similar News
News October 6, 2025
இருமல் மருந்து விவகாரம்: 14 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் <<17921980>>இருமல் மருந்து<<>> குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் ஆதாரங்களை திரட்டுவதற்காக, சிந்த்வாரா மாவட்டத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தையின் உடலை தோண்டி எடுக்க சிறப்பு புலனாய்வு குழு முடிவெடுத்துள்ளது. இதனிடையே, தங்கள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட சிரப் பேட்ச்-ஐ கண்டறிய, TN அதிகாரிகளோடு மஹாராஷ்டிரா அதிகாரிகள் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளனர்.
News October 6, 2025
வானில் அரிதான அதிசயம்: PHOTOS

வண்ணக்கவிதை போல் வானவில் – சந்திரன் இரண்டும் ஒன்றாக தோன்றிய அற்புதமான காட்சி, புகைப்படமாக SM-யில் பரவி பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியது. இது, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே எடுக்கக்கூடிய புகைப்படம். இதுபோன்ற தருணம் இனி எப்போது வரும் என்று தெரியாது. மேலே உள்ள போட்டோக்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த இயற்கை அழகு எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News October 6, 2025
திமுக அரசுக்கு பக்கவாத்தியம் வாசிக்காதீங்க: EPS

கரூர் துயரத்தில் திமுக அரசுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும் என EPS விமர்சித்துள்ளார். In Karur Where there was no way out என்ற செய்தியை X-ல் சுட்டிக்காட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக்கு குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.