News October 5, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (05.10.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)

Similar News

News October 6, 2025

ஸ்தம்பித்த தி.நகர்…!

image

தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால் மக்கள் புத்தாடை, நகை, பட்டாசு வாங்க வணிக வீதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் குவிந்தனர். குறிப்பாக தி.நகர், பாண்டிபஜார், மயிலாப்பூர் பகுதியில் உள்ள வணிக வீதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டனர். இதனால், அப்பகுதியே ஸ்தம்பித்து காணப்பட்டது.

News October 6, 2025

சென்னையில் 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

image

சென்னையில் தி.நகர் பகுதியில் தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி பொருட்கள் வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அங்கு தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு போடப்படவுள்ளது.

News October 5, 2025

சென்னை பெண்களே.. இலவச தையல் மிஷின் வேணுமா?

image

சென்னையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் மிஷின் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!