News October 5, 2025
முடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய இஸ்ரேல்

காசாவிற்கு நிவாரண பொருள்களை கொண்டு சென்ற சமூக ஆர்வலர்களை, இஸ்ரேல் ராணுவம் விலங்குகளை போன்று நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை, முடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்தியதாகவும், இஸ்ரேல் கொடியை முத்தமிட வைத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மொத்தம் 137 சமூக ஆர்வலர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
Similar News
News October 5, 2025
விஜய் ரசிகர்களுக்கு சோகம்

‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலை தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், அதற்குள் கரூர் துயரத்தில் 41 பேர் பலியான சோகம் நிகழ்ந்தது. இதனால், விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பாடலை ரிலீஸ் செய்ய வேண்டாம் என விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. இதனால், முதல் பாடலை காலவரையின்றி ஒத்திவைக்க படக்குழுவிடம் விஜய் கூறியுள்ளாராம்.
News October 5, 2025
நிச்சயமாக ஒருநாள் கேப்டன் ஆவேன்: ஜெய்ஸ்வால்

ஒவ்வொரு நாளும் தலைவனாவதற்கான பண்புகளை வளர்த்து வருவதாக ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஒருநாள், நிச்சயமாக இந்திய அணியின் கேப்டனாக களமிறங்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆரம்பத்தில் பானிபூரி விற்று பிழைப்பு நடத்தியதை நினைவு கூர்ந்த அவர், நீங்கள் 100% உழைப்பை செலுத்தினால், எந்த வேலையும் சிறுமை கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
டானிக் குடித்த குழந்தைகள் பலி: ம.பி. அரசு மறைக்க முயற்சி?

ம.பி.,யில் இருமல் டானிக் குடித்த குழந்தைகளின் உயிரிழப்புகளை மறைக்க அரசு நிர்வாகம் முயன்றதாக NDTV நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசு ஆவணங்களின் படி 11 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், மருத்துவ அதிகாரிகள் நவராத்திரி விடுப்பில் உள்ளதால், இன்னும் ஒரு பிரேத பரிசோதனை கூட செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


