News April 15, 2024
பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் திறப்பு

தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் (செப், 17) பிற்பகல் 1 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்கும். மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரம் முதுகுளத்தூர், பரமக்குடி, பார்த்திபனூர், கமுதி, அபிராமம் ,மஞ்சூர் ,மீசல் ,கடலாடி, திருவாடானை, பாண்டியூர், தூவல், சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News September 17, 2025
ராமநாதபுரம்: வேலைநாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு <
News September 17, 2025
ராமநதபுரம்: மின்சாரம் தாக்கி பெண் பலி

தங்கச்சிமடம் விக்டோரியா நகரை சேர்ந்த மீனவர் வினோ என்பவரின் மனைவி பிரதிஷ்டா (30). இவர் நேற்று (செப் 16) மாலை வீட்டில் குளிக்கச் சென்ற போது மின் மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது சுவிட்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்கச்சிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா விசாரிக்கிறார். பிரதிஷ்டா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.