News October 5, 2025

நகை கடன்.. வந்தது புதிய அறிவிப்பு

image

நகை கடன் வாங்குபவர்கள், இனி அசல் & வட்டியை 12 மாதங்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும். முன்பு இருந்த, வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல கடனை செலுத்தியவுடன், 7 வேலை நாள்களுக்குள் அடகு வைத்த தங்கத்தை, கடன் கொடுத்த நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 5, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

image

காலாண்டு விடுமுறை முடிந்து நாளை வகுப்புகள் தொடங்கும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பருவமழை தொடங்கவுள்ளதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, *மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. *உபயோகம் இல்லாத மின் பொருள்கள் பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது. *பள்ளி கட்டடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.

News October 5, 2025

தங்கம் விலை தொடர்ந்து உயர காரணம் இதுதான்

image

கல்யாணம் மற்றும் பண்டிகை சீசன், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை, ரூபாய் மதிப்பு குறைவது போன்ற காரணங்களால் தற்போது மக்கள் தங்கம் வாங்குவது அதிகமாக உள்ளது. மேலும், ரஷ்ய-உக்ரைன் போர், டாலரை சார்ந்திருப்பதை குறைக்க உலக நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவிப்பது ஆகியவற்றாலும் தங்கத்துக்கு தேவை அதிகம் உள்ளது. ஆனால், உற்பத்தியோ குறைவு என்பதால் விலை தாறுமாறாக ஏறுகிறது. SHARE IT

News October 5, 2025

முதலை கண்ணீர்னு ஏன் சொல்றாங்க? இதோ காரணம்

image

சோகமாக இருப்பதால் முதலைகள் அழுவதில்லை. மாறாக, சாப்பிடும் போதுதான் அவை அழுகின்றன. முதலைகளின் தாடைக்கு மேல் கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. தனது உணவை அவை மென்று திண்ணும்போது, கண்ணீர் சுரப்பிகள் அழுத்தத்திற்கு உள்ளாகிறதாம். இதனால்தான் அவற்றுக்கு கண்ணீர் வருகிறது. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை நீங்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!