News October 5, 2025
ATM-க்கு 4 இலக்க பின் நம்பர் வந்தது எப்படி தெரியுமா?

மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவரால் 1967-ல் ATM மெஷின் கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில், பாதுகாப்புக்காக 6 இலக்க PIN-ஐ அவர் பரிந்துரைத்தார். ஆனால், மக்கள் இதனை நியாபகம் வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள் என அவர் பணியாற்றிய வங்கி கூறியிருக்கிறது. இதனால் தான் ATM PIN-க்காக 4 இலக்கங்களை பரிந்துரைத்தார். அதனையே தற்போது வரை உலக வங்கிகள் பின்பற்றி வருகிறது. SHARE.
Similar News
News April 6, 2026
₹500 கோடி ஊழல்.. அன்பில் மகேஸ் மீது குற்றச்சாட்டு

திருவெறும்பூரில் அன்பில் மகேஸுக்கு எதிராக அதிமுக சார்பில் EX MP குமார் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அங்கு பரப்புரை மேற்கொண்ட குமார், பள்ளிக்கல்வித்துறையில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திட்டத்தில் பினாமி நிறுவனம் மூலம் அன்பில் மகேஸ் ₹500 கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதை மறுத்தால், பினாமி நிறுவனத்தின் பெயரை வெளியிட தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
பிரசாரத்தை ரத்து செய்த விஜய்.. கடைசி நேர அறிவிப்பு!

சென்னையில் இன்று விஜய் மேற்கொள்ளவிருந்த பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தி.நகரில் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், வில்லிவாக்கம், தி.நகரில் தலா 1 மணி நேரம் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அது குறைவான நேரம் எனக் கூறி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட விஜய் முடிவு செய்துள்ளாராம்.
News April 6, 2026
அண்ணாமலை-நயினார் மோதலா? H.ராஜா Open Talk

நயினாருடன் மோதல் இருந்ததால்தான் அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த H.ராஜா, பாஜகவுக்குள் சண்டையை ஏற்படுத்தவே இப்படியான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறினார். அண்ணாமலை கடந்த தேர்தலில் போட்டியிட்டார். தற்போது போட்டியிடவில்லை அவ்வளவுதான் வேறு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>


