News October 5, 2025
புதுகை: சிறுவன் கீழே விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த ராஜகிரியை சேர்ந்தவர் மாரிமுத்து என்பரின் மகன் அருள்(7), நேற்று ராஜகிரியில் SOC-யில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
புதுக்கோட்டை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
புதுக்கோட்டை: பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை, அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கடைகள் அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை-திருப்பத்தூர் ரோடு, புதுகை-தஞ்சாவூர் ரோடு, திருச்சி ரோடு, விராலிமலை ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் தேவர்ஜெயந்தி, குருபூஜையையொட்டி குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் (அக்.,29) நாளையும் (அக்.,30) விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி புதுகை மாநகர், ஆவுடையார்கோவில் திருமயம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் 37 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


