News October 5, 2025
நாமக்கல் அருகே விபத்து: ஒருவர் பலி!

குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 42. இவர் தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர, டூவீலரில் சானார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் குறுக்கே சென்றதால், நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News October 5, 2025
நாமக்கல்: ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை!

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு வெளிநாடு சென்று முதுகலைப்படிப்பு படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htmல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அக்.31 ஆம் தேதிக்குள் அனுப்ப நாமக்கல் ஆட்சியர் தகவல்.
News October 5, 2025
நாமக்கல்: இளம் பட்டதாரிகளுக்கு ரூ.66,000 ஊக்கத்தொகை!

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் 12 மாதங்களுக்கு புதிதாக பட்டப்படிப்பு முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடியும் வரை மாதம் ரூ.5000, ஒருமுறை மானியம் ரூ.6000 என மொத்தம் ரூ.66,000 அரசு சார்பில் வழங்கப்படும். இறுதியில் பயிற்சி முடிவடைந்தற்கான சான்றிதழும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் இங்கே <
News October 5, 2025
நாமக்கல்: டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றி வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2025ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதை பூர்த்து செய்து அக்.15ந் தேதிக்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தகவல்.