News April 15, 2024

5ஜி ஊழல் குறித்து பேசத் தயாரா?

image

2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேசத் தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் அறியாமையில் பேசுகிறார் என சொல்லக்கூடாது. ஆனால், அறிவிலித்தனமாக பேசுகிறார். 2ஜி தீர்ப்பை படிக்க வேண்டும். அந்த வழக்கில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதனை எதிர்கொள்ள நான் தயார். அதிமுகவினர் 2ஜி விவகாரத்தில் எதுவும் தெரியாமல் பேசுகின்றனர் என்றார்.

Similar News

News August 21, 2025

Post Man மூலம் Mutual Fund திட்டம்.. விரைவில் அமல்

image

தபால்காரர்கள் மூலம் பொதுமக்களை மியூச்சுவல் ஃபண்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா, பிஹார், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 1 லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் ‘மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்’ என அழைக்கப்படுவர்.

News August 21, 2025

தவெக மாநாட்டில் 40 அடி உயர கொடிக்கம்பம்

image

தவெக மாநாட்டில் புதிதாக 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நேற்று பிற்பகல் <<17463695>>100 அடி உயர கொடிக்கம்பத்தை<<>> கிரேன் கொண்டு நிறுவ முயன்ற போது கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் கொடிக்கம்பம் நிறுவும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடைக்கு அருகே 40 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவியுள்ளனர். புதிய இடத்தை N.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் பார்வையிட்டனர்.

News August 21, 2025

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: ரஹானே

image

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூர் போட்டிகளை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 2023 – 2024 ரஞ்சி கோப்பை வின்னிங் கேப்டனான இவர், இரானி டிராபியையும் வென்றார். இதனால் 2026 IPL சீசனில், ரஹானே KKR அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!