News October 4, 2025

உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி

image

வங்கிகளில் உரிமை கோரப்படாத ₹1.84 லட்சம் கோடி சொத்துக்களை, உரியவர்களுக்கு திருப்பி தரும் பணிகள் தொடங்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் வந்தால், உடனே பணம் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், RBI-ன் UDGAM போர்ட்டல் மூலம் சொத்துக்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 5, 2025

பாஜக ஒன்றும் நீதிமன்றம் அல்ல: நயினார் நாகேந்திரன்

image

மக்களின் வெகுஜன விரோதியாக திமுக மாறியுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தவெக – பாஜக மறைமுக கூட்டணி உள்ளதாக வெளியாகும் தகவலை மறுத்த அவர், இது திமுகவின் சதி என்றார். மேலும், யாரையும் காப்பாற்ற பாஜக ஒன்றும் நீதிமன்றம் அல்ல என்று விஜய்யின் பின்னால் பாஜக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். சம்பவம் நடந்த அன்று கரூருக்கு இரவோடு இரவாக CM வந்தது எப்படி என கேள்வி எழுப்பினார்.

News October 5, 2025

ஜனாதிபதி மாளிகையில் காந்தாரா சாப்டர் 1

image

‘காந்தாரா: சாப்டர் 1’ படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் இப்படம் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு, ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த், தயாரிப்பாளர் சலுவே கவுடா ஆகியோருக்கு திரெளபதி முர்மு பாராட்டு தெரிவிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்தாச்சா?

News October 5, 2025

சோனம் வாங்சுக் விடுதலை கோரிய மனு நாளை விசாரணை

image

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு முக்கிய காரணம் என காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் கணவர் குற்றமற்றவர் எனக் கூறி, அவரை விடுதலை செய்யுமாறு, அவரது மனைவி கீதாஞ்சலி SC-ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நாளை (அக்.6) அரவிந்த் குமார், NV அஞ்சரியா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணக்கு வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!