News October 4, 2025

சுயமரியாதைக்காரன் என்பதில் மகிழ்ச்சி: CM ஸ்டாலின்

image

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா செங்கல்பட்டில் நடந்து வருகிறது. இதில் பேசிய CM ஸ்டாலின், சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு இம்மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியை தருவதாகவும், கலைஞர், பேராசிரியருக்கு பின்னர் தி.க. தலைவர் கி.வீரமணி தன்னை வழிநடத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், திராவிடர் கழகத்திற்கு எதிராக திமுக தொடங்கப்படவில்லை என்றும் கூறினார்.

Similar News

News October 5, 2025

பாஜக ஒன்றும் நீதிமன்றம் அல்ல: நயினார் நாகேந்திரன்

image

மக்களின் வெகுஜன விரோதியாக திமுக மாறியுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தவெக – பாஜக மறைமுக கூட்டணி உள்ளதாக வெளியாகும் தகவலை மறுத்த அவர், இது திமுகவின் சதி என்றார். மேலும், யாரையும் காப்பாற்ற பாஜக ஒன்றும் நீதிமன்றம் அல்ல என்று விஜய்யின் பின்னால் பாஜக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்தார். சம்பவம் நடந்த அன்று கரூருக்கு இரவோடு இரவாக CM வந்தது எப்படி என கேள்வி எழுப்பினார்.

News October 5, 2025

ஜனாதிபதி மாளிகையில் காந்தாரா சாப்டர் 1

image

‘காந்தாரா: சாப்டர் 1’ படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் இப்படம் திரையிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிறகு, ரிஷப் ஷெட்டி, ருக்மினி வசந்த், தயாரிப்பாளர் சலுவே கவுடா ஆகியோருக்கு திரெளபதி முர்மு பாராட்டு தெரிவிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்தாச்சா?

News October 5, 2025

சோனம் வாங்சுக் விடுதலை கோரிய மனு நாளை விசாரணை

image

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு முக்கிய காரணம் என காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் கணவர் குற்றமற்றவர் எனக் கூறி, அவரை விடுதலை செய்யுமாறு, அவரது மனைவி கீதாஞ்சலி SC-ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நாளை (அக்.6) அரவிந்த் குமார், NV அஞ்சரியா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணக்கு வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!