News October 4, 2025

நகைக் கடன்… வந்தது முக்கிய அறிவிப்பு

image

நகைக் கடன் விதிகளில் மாற்றம் செய்து RBI அறிவித்துள்ளது. 2026 ஏப்.1 முதல் நகைக் கடன் வரம்பு 3 அடுக்குகளாக பிரிக்கப்படும். ₹2.5 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு நகை மதிப்பில் 85% கடன் வழங்கப்படும். ₹2.5- ₹5 லட்சத்திற்குள் கடன் வேண்டுமெனில் 80%, அதற்குமேல் வேண்டுமெனில் 75% அளவுக்குமே கடன் கிடைக்கும். மேலும், நகைக் கடனை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. SHARE

Similar News

News March 19, 2026

41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து.. அரசு அதிரடி

image

பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பார்லிமெண்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2025-ல் மட்டும் 41.41 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் போலி ரேஷன் கார்டுகள் களையெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News March 19, 2026

விஜய்யுடன் கூட்டணி.. கடைசி நேர அரசியல் திருப்பம்

image

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியபின், அரசியல் களம் பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் NR காங்., கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், தங்கள் கூட்டணிக்கு வந்தால் தவெகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்குவோம் என NR காங்., பொதுச் செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார். இதனிடையே, ரங்கசாமியுடன் புஸ்ஸி ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாராம்.

News March 19, 2026

உங்க ஊருக்கும் இப்படி ஒன்னு கண்டிப்பா இருக்கும்..

image

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருப்பதை போன்று, அந்த ஊரை கண்டறிவதற்கும் ஒரு அடையாளம் கண்டிப்பாக இருக்கும். அது ஒரு கோயில், கடை, பஸ் ஸ்டாப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக மலைக்கோட்டையை பார்த்துவிட்டால், திருச்சிக்கு வந்துவிட்டோம் என்ற ஃபீல் அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வந்துவிடும். அதேபோல், உங்கள் ஊர் வந்துவிட்டதை எதை வைத்து கண்டறிவீர்கள்? உங்கள் ஊரின் அடையாளத்தை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!