News October 4, 2025

திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா : நினைவுகூர்ந்த PM மோடி

image

திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா இருவரின் பிறந்தநாளான இன்று, அவர்களின் தியாகங்களை PM மோடி நினைவுகூர்ந்து X-ல் பதிவிட்டுள்ளார். திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரும், விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர் என்று அதில் தெரிவித்துள்ளார். மாமனிதர்களை நாமும் வாழ்த்தலாமே?

Similar News

News October 5, 2025

ADMK அல்ல; அது EDMK: TTV தினகரன்

image

பொதுச் செயலாளர் பதவிக்காக அதிமுகவின் அடிப்படை விதிகளையே மாற்றியமைத்தவர் EPS என TTV தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். EPS-ஐ தவிர ராமசாமியோ, குப்புசாமியோ யார் CM வேட்பாளராக இருந்தாலும் NDA கூட்டணிக்கு தனது ஆதரவு உண்டு என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ADMK தற்போது EDMK ஆக மாறிவிட்டது என்றும் விமர்சித்தார். கூட்டணி பற்றி டிசம்பரில் தெரிவிப்பேன் என்று மீண்டும் கூறினார்.

News October 5, 2025

சாப்பிட்டதும் தூங்க செல்கிறீர்களா? இதை கவனிங்க

image

சாப்பிட்டதும் பலரும் தூங்கி விடுகிறார்கள். இது நமது ஹார்மோனல் சமநிலையை பாதிக்கும். உணவு ஜீரணத்தை தாமதமடைய செய்யும். மேலும் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்னையை உண்டாக்கும். உடல் எடை அதிகரிப்பு, பருமன் பிரச்னையை ஏற்படுத்தும். ஆதலால் சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்களாவது நடக்க வேண்டுமென உடல்நல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 5, 2025

3,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் ரெனால்ட்

image

ரெனால்ட் நிறுவனம் உலகளவில் 3,000 பேரை வேலைநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி சேமிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கம் இருக்கும் என்றும், HR மற்றும் Finance துறைகளில் இந்த வேலைநீக்கம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என ரெனால்ட் விளக்கம் அளித்துள்ளது. 2024-ல் 98,636 பேர் உலகளவில் வேலை செய்தனர்.

error: Content is protected !!