News October 4, 2025
நாமக்கல் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நாமக்கல்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
Similar News
News October 5, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (அக்டோபர். 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 5) முதல் முட்டையின் விலை ரூ. 5.05 ஆகவே நீடிக்கும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
News October 5, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.04 நாமக்கல்-(தேசிங்கன்- 8668105073) ,வேலூர் -( ரவி- 9498168482 ), ராசிபுரம் -(கோவிந்தசாமி- 9498169110), குமாரபாளையம் -(செல்வராஜு- 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 4, 2025
எடப்பாடி பழனிசாமி நாமக்கல் சுற்றுப் பயணத்தில் மாற்றம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 07 முதல் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாளை (அக்.05), மறுநாள் (அக்.06) நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் அக்.08ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியிலும், அக்.09ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர் தொகுதியிலும் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.