News October 4, 2025
செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News October 5, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 5, 2025
செங்கல்பட்டு: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 5, 2025
வண்டலூரில் மாயமான சிங்கம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேரு என்ற புதிய ஆண் சிங்கம், விடப்பட்டது பொதுவாக, ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் விடப்படும் சிங்கங்கள், மாலை நேரத்தில் தானாக தங்களது கூண்டிற்கு வந்துவிடும். ஆனால் இந்த புதிய சிங்கம் திடீரென மாயமானது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிங்கம் ‘லயன் சபாரி’ பகுதியில் சுற்றித்திரிவதை உறுதிப்படுத்தினர்.